01/02/2023
உற்சாகமே உங்கள் சொத்து!
கவலைப்படுவதால் எந்த நல்லதும் நடக்க வாய்ப்பில்லை. நிலைமை மேலும் மோசமாகத்தான் செய்யும். அதற்குப் பதிலாக நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தொடங்குங்கள்.
நான் வெற்றிபெற பிரார்த்திருக்கிறேன். நான் வெற்றி பெறப் போகிறேன். நான் வாழப் போகிறேன் போன்ற நம்பிக்கை உரையாடல்களை அடிக்கடி கூறுங்கள்.
நாளையை நினைத்து பெரிதாக கவலைப்படாதீர்கள். இன்றைய தினத்தில் முழுமையாக அனுபவித்து வாழுங்கள்.
மிக மோசமாக அப்படி என்ன நடந்துவிடும்? தைரியமாக அணுகுங்கள். பிறகு அந்த மோசமான சூழ்நிலைகளை மேம்படுத்த அமைதியாக முயற்சி செய்யுங்கள். துணிவே துணை. நம்பிக்கையாக இருங்கள்.
பிரச்சனை என்ன? பிரச்சனைக்கான காரணம் எது? சாத்தியமான தீர்வுகள் என்னென்ன? அதில் எது சிறந்த தீர்வு? என ஆலோசித்து ஒரு சிறந்த தீர்வைச் செயல்படுத்துங்கள்.
சுறுசுறுப்பாய், உற்சாகமாய் இருங்கள். கவலை கொண்ட மனிதர் தன்னை ஒரு வேலையில் மூழ்கடித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர் துயரத்தில் மூழ்கி விடுவார். லிவ் நவ் ப்ளீஸ்.
இதுவும் கடந்துபோகும். எல்லா பிரச்சனைகளும் சரியாகும். நிலைமை சீராகும். எல்லாம் நல்லபடி நடக்கும் எனப் பரிபூரணமாக நம்புங்கள்.
உங்களின் ஆசீர்வாதங்களைப் பட்டியலிடுங்கள். வாழ்வில் நல்ல அம்சங்களைப் பாருங்கள். கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின் இரும்புக் கதவுகளை இழுத்து மூடுங்கள். இன்றைய தினத்தை முழுமையாய், சிறப்பாய் வாழுங்கள்.
கடந்த காலம் கடந்து போனதாகவே இருக்கட்டும். இன்று ஒருநாள் மட்டும். இந்த நாளை முழுமையாய் வாழ்வதற்கு முயற்சிப்பேன் என்று சொல்லிக் கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொரு நாளும் இந்த ஒரு நாள் வாழ்க்கையை மகிழ்வாய் வாழுங்கள். வேண்டும். இல்லையென்றால் அவர் துயரத்தில் மூழ்கி விடுவார்.நிகழ்காலத்தில் வாழுங்கள் ..
உதயசான்றோன் எழுதிய "வெற்றிக்கு 16"
புத்தகத்திலிருந்து “How to stop worrying and start living “ புத்தகத்தை பற்றி