08/06/2026
🚌 மீண்டும் வருமா வேதாரண்யம் – சென்னை நேரடி அரசு விரைவு பேருந்து சேவை? 🚌
1990 முதல் 2002 வரை அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வேதாரண்யம் – சென்னை (பாரிஸ் கார்னர்) வழித்தடத்தில் காலை மற்றும் இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
📍 வழித்தடம்:
வேதாரண்யம் – வாய்மேடு – திருத்துறைப்பூண்டி – திருவாரூர் – மயிலாடுதுறை – சிதம்பரம் – கடலூர் – திண்டிவனம் – சென்னை
இந்த சேவை குறிப்பாக வேதாரண்யம் முதல் திருத்துறைப்பூண்டி வரையிலான கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பின்னர் கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக பேருந்துகள் இயக்கப்படத் தொடங்கியதும் இந்த வழித்தட சேவை நிறுத்தப்பட்டது.
இன்றும் வேதாரண்யம், வாய்மேடு, திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார மக்களிடமிருந்து சென்னை நோக்கி நேரடி அரசு பேருந்து சேவை வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது. ஆனால் "போதிய பயணிகள் இல்லை" என்ற காரணத்தால் இதுவரை புதிய சேவை அறிவிக்கப்படவில்லை.
ஆச்சரியமாக, தனியார் நிறுவனங்களின் 8-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் வேதாரண்யம் – சென்னை இடையே இயக்கப்பட்டு வருகின்றன. இதுவே அந்த வழித்தடத்தில் பயணிகள் தேவையை தெளிவாக காட்டுகிறது.
தற்போது இயக்கப்படும் வேதாரண்யம் – சென்னை (கிளாம்பாக்கம்) ECR வழி சேவைகளில் ஒரு பேருந்தையாவது,
📍 வேதாரண்யம் – வாய்மேடு – திருத்துறைப்பூண்டி – திருவாரூர் – மயிலாடுதுறை – வடலூர் – பண்ருட்டி – திண்டிவனம் – கிளாம்பாக்கம்
என்ற பழைய வழித்தடத்தில் இயக்கினால், ஆயிரக்கணக்கான மக்களுக்கு நேரடி போக்குவரத்து வசதி கிடைக்கும்.
மக்களின் நீண்டநாள் கோரிக்கையை அரசு பரிசீலித்து, மீண்டும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழித்தடத்தில் சேவையை தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
உங்கள் கருத்து என்ன?
வேதாரண்யம் – சென்னை பழைய வழித்தட சேவை மீண்டும் தொடங்கப்பட வேண்டுமா? 👇