06/08/2026
"என்னைக் கொலைகாரியாக்கிடாத பிரியா!" என கத்தினாள்...
"என்னடி கத்திட்டு இருக்க? மதனுக்குக் கால் சரியாகட்டும்... உனக்கு அவன்தான் புருஷன்! இப்படியே திமிர் எடுத்து ஆடிட்டே திரியலாம்னு நினைக்காத..." எனக் கூற,
"சும்மா இரு பிரியா," என்றான் மதன்...
"நீ சும்மா இரு மதன்! எவ்வளவு நாள் தான் அப்பா, அம்மா சாகுற நேரம் சொன்ன ஆசையை நிறைவேற்றாமல் இருக்க முடியும்? உன் குழந்தையை இவ வயித்துல சுமக்கணும்!" என்றதும் உடலெல்லாம் அருவருத்துப் போனது அவந்திகாவிற்கு...
எவனோ ஒருவனின் குழந்தை தன் வயிற்றில் வளரும் என்பதை அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை...
ஆக்ரோஷத்துடன் பிரியாவைப் பிடித்துத் தள்ளிவிட்டவள், "இதுக்கு மேல ஏதாவது பேசினா உன்னைக் கொன்னுடுவேன்!" என அருகில் இருந்த பூச்சாடியைத் தலைக்கு மேல் தூக்கினாள்...
வேகமாக ஊன்றுகோலை ஊன்றி எழுந்து வந்த மதன் "அவந்தி! நீ என்ன பண்ற? அதை கீழே போடு, நாம பேசலாம்," எனக் கூறி கையிலிருந்த ஜாடியை பிடித்து கீழே வைத்தான்...
"என்ன பேசச் சொல்ற மதன்... என்ன பேசச் சொல்ற? இந்த விஷயம் நீ சொல்லாம இவளுக்குத் தெரிந்திருக்காது... நீ சம்மதிக்காம அப்பா அத்தை மாமா கிட்ட பேசி இருக்க மாட்டாங்க... அப்ப இவ்வளவு நாளும் நீயும் அந்த நினைப்புலதான் என்கூடப் பழகிட்டு இருந்தியா?" என சரியாக நடந்த விஷயங்களை அவந்திகா கூற மதனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை...
சமாளிக்கும் விதமாக, "அவந்தி, நான் என்ன சொல்ல வர்றேங்குறதை முழுசா கேளு..." என்றான்...
"நிறுத்து... நீங்க சொல்ற எந்தக் கதையையும் கேட்க நான் தயாரா இல்லை... இந்த அவந்திகா இந்த ஜென்மத்துல சர்வனுக்கு மட்டும்தான்! உயிரோடு இருக்கிறது வரை நான் சர்வனோட அவந்திகா தான்!" என சீற்றத்துடன் கூறினாள்...
👉👉👉👉லட்சக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉👉
42 🌺 தழல் நதியில் பூத்த செங்காந்தள்🥀,
https://pratilipi.app.link/8udFiA2vn5b
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை