Vanathi Faizal Novels

Vanathi Faizal Novels எழுத்துக்களின் காதலி - வானதியின் நாவல்கள்

"என்னைக் கொலைகாரியாக்கிடாத பிரியா!" என கத்தினாள்...          ​"என்னடி கத்திட்டு இருக்க? மதனுக்குக் கால் சரியாகட்டும்... ...
06/08/2026

"என்னைக் கொலைகாரியாக்கிடாத பிரியா!" என கத்தினாள்...

​"என்னடி கத்திட்டு இருக்க? மதனுக்குக் கால் சரியாகட்டும்... உனக்கு அவன்தான் புருஷன்! இப்படியே திமிர் எடுத்து ஆடிட்டே திரியலாம்னு நினைக்காத..." எனக் கூற,

​"சும்மா இரு பிரியா," என்றான் மதன்...

​"நீ சும்மா இரு மதன்! எவ்வளவு நாள் தான் அப்பா, அம்மா சாகுற நேரம் சொன்ன ஆசையை நிறைவேற்றாமல் இருக்க முடியும்? உன் குழந்தையை இவ வயித்துல சுமக்கணும்!" என்றதும் உடலெல்லாம் அருவருத்துப் போனது அவந்திகாவிற்கு...

​எவனோ ஒருவனின் குழந்தை தன் வயிற்றில் வளரும் என்பதை அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை...

​ஆக்ரோஷத்துடன் பிரியாவைப் பிடித்துத் தள்ளிவிட்டவள், "இதுக்கு மேல ஏதாவது பேசினா உன்னைக் கொன்னுடுவேன்!" என அருகில் இருந்த பூச்சாடியைத் தலைக்கு மேல் தூக்கினாள்...

வேகமாக ஊன்றுகோலை ஊன்றி எழுந்து வந்த மதன் ​"அவந்தி! நீ என்ன பண்ற? அதை கீழே போடு, நாம பேசலாம்," எனக் கூறி கையிலிருந்த ஜாடியை பிடித்து கீழே வைத்தான்...

​"என்ன பேசச் சொல்ற மதன்... என்ன பேசச் சொல்ற? இந்த விஷயம் நீ சொல்லாம இவளுக்குத் தெரிந்திருக்காது... நீ சம்மதிக்காம அப்பா அத்தை மாமா கிட்ட பேசி இருக்க மாட்டாங்க... அப்ப இவ்வளவு நாளும் நீயும் அந்த நினைப்புலதான் என்கூடப் பழகிட்டு இருந்தியா?" என சரியாக நடந்த விஷயங்களை அவந்திகா கூற மதனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை...

சமாளிக்கும் விதமாக, ​"அவந்தி, நான் என்ன சொல்ல வர்றேங்குறதை முழுசா கேளு..." என்றான்...

​"நிறுத்து... நீங்க சொல்ற எந்தக் கதையையும் கேட்க நான் தயாரா இல்லை... இந்த அவந்திகா இந்த ஜென்மத்துல சர்வனுக்கு மட்டும்தான்! உயிரோடு இருக்கிறது வரை நான் சர்வனோட அவந்திகா தான்!" என சீற்றத்துடன் கூறினாள்...

👉👉👉👉லட்சக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉👉
42 🌺 தழல் நதியில் பூத்த செங்காந்தள்🥀,

https://pratilipi.app.link/8udFiA2vn5b

இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

"நாம லவ் பண்ணலாமா?" எனப் பரிதாபமாக அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் கண்களில் தெரிந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவளி...
06/08/2026

"நாம லவ் பண்ணலாமா?" எனப் பரிதாபமாக அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் கண்களில் தெரிந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவளின் இரு கன்னங்களையும் தன் கையில் தாங்கினான்...

​"எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து உன்னை லவ் பண்ணிட்டு இருக்கேன்... உயிரோடு இருக்கிறது வரை உன்னை தான் லவ் பண்ணுவேன்... ஆனா, எல்லா லவ்வர்ஸையும் போல நாம பேசுறதுக்குக் கொஞ்ச நாள் ஆகலாம்... அதுவரை நல்ல ஃப்ரெண்ட்ஸா இருப்போம்..." எனக் கூற, "தேங்க்ஸ்..." என்றாள்...

​"அண்ணா, அண்ணி தேடுவாங்க, போகலாமா?" எனச் சத்யா கேட்க, "சரி..." எனத் தலையசைத்தாள்...

​வாசலருகே சென்றதும் திரும்பிப் பார்த்தவள், "சத்யா..." எனத் தயக்கத்துடன் அழைத்தாள்...

​"என்னடி?"

​"அது... லவ் பண்றோம்னு அவன் என்னைக் கிஸ் பண்ணியிருக்கான்... நானும் கையில, நெத்தியில கிஸ் பண்ணியிருக்கேன்... ஹக் கூட பண்ணி இருக்கோம்.. என்னை அதுக்காக வெறுத்திட மாட்டியே?" என உதடு நடுங்க விஷாலினி கேட்க, அவளின் குற்றவுணர்ச்சி, வலி என அனைத்தையும் உணர்ந்தவன் வேகமாக அவளை அணைத்துக்கொண்டான்...

​இதற்கு முன்பும் பல நேரங்களில் அவளைத் தோளுடன் சேர்த்து அணைத்திருக்கிறான்; அதில் ஆழமான நட்பு மட்டுமே இருந்தது... ஆனால், இந்த அணைப்பு அவளுக்குப் பாதுகாப்பைக் கொடுத்தது... சேர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது போல் தோன்ற, இதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையையெல்லாம் சேர்த்து அழத் தொடங்கினாள் விஷாலினி...

​"சாரிடா... சாரிடா..." எனக் கூறியவாறு அவள் அழ, கண்களில் வழிந்த கண்ணீருடன், இத்தனை வருடங்கள் அடக்கி வைத்திருந்த காதல் வலி அவள் அணைப்பிலேயே விலகியது போல் தோன்ற, அவளின் உச்சி முடியை விலக்கி நெற்றியில் முத்தமிட்டான் சத்யா...

​சிறிது நேரம் கழித்து விலகியதும், "இப்பதான் லவ் பண்ணத் தொடங்குறோம்... அதுக்குள்ள இதெல்லாம் தப்பு! போலாமா?" என குறும்புடன் சிரித்தவாறு சத்யா கேட்க, தன் கண்ணீரைப் புறங்கையால் துடைத்துக்கொண்டு, முகம் மலரத் தலையாட்டினாள் விஷாலினி...

👉👉👉👉லட்சக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉👉
78 💖ராட்சசனின் ரகசிய காதலி✨✨✨✨,

https://pratilipi.app.link/OQHBw2qrm5b

வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

அவந்திகாவிற்கு நிறைய குழப்பங்கள் இருந்தன... நிஜமாகவே சச்சின் நவ்யாவை விரும்பித்தான் திருமணம் செய்து கொள்கிறானா எனத் தெரி...
06/08/2026

அவந்திகாவிற்கு நிறைய குழப்பங்கள் இருந்தன... நிஜமாகவே சச்சின் நவ்யாவை விரும்பித்தான் திருமணம் செய்து கொள்கிறானா எனத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது... எனவே, வேகமாகச் சர்வனின் அறைக்குச் சென்றாள்...

​"நான் கூப்பிட நினைச்சேன்... நீயே வந்துட்ட! வர வர உனக்கு என் மேல பயமே இல்லாம போயிடுச்சுல்ல? நான் கண்ணைக் காமிச்சும் நிக்காம போயிட்டே இருக்குற..." என சர்வன் கோபத்துடன் கூற, அவனின் கோபத்தைப் பார்த்துப் பழகிப்போனதால் அதைக் கண்டுகொள்ளாமல்,

​"உண்மையைச் சொல்லுங்க சர்வா... என்னைப் பழி வாங்குறதுக்காக நவ்யாவுக்கும் சச்சினுக்கும் கல்யாணம் பண்ணப் பார்க்கிறீங்களா?" என கேட்டாள் அவந்திகா...

​"உன்னைப் பழி வாங்குறதுக்காகச் சச்சினோட வாழ்க்கையை அழிக்கிற அளவு நான் கேவலமானவன் இல்ல.... உன்னை விட அவன் எனக்கு முக்கியம்..." எனக் கூற வலியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்...

அவளைக் கண்டு கொள்ளாமல் திரும்பி நின்று தன் சட்டைப் பட்டன்களைக் கழட்டத் தொடங்கியதும், 'திரும்பிச் சென்று விடலாமா?' என யோசித்தவள் நவ்யாவை நினைத்து அந்த முடிவைத் தள்ளிப் போட்டு விட்டு,

​"ப்ளீஸ் சர்வா! ஏதோ பெரிய விஷயம் நடந்திருக்கிறதாலதான் நீங்க எல்லாரும் இப்படிப் பண்றீங்கன்னு எனக்குத் தெரியுது... ஆனா அது என்ன விஷயம்னு என்கிட்ட சொல்லவும் மாட்டேங்கிறீங்க! நவ்யாவுக்கும் சச்சின் அண்ணாவைப் பிடிச்சுப் போயிடுச்சு... என்னை கஷ்டப்படுத்துறதுக்காக அண்ணா இப்படி பண்ணி இருந்தா என்னால தாங்கிக்கவே முடியாது!"என்றாள்...

​சட்டையைக் கழட்டித் தோளில் போட்டவன், "பரவாயில்லையே! பட்டன்ல கையை வைச்சாலே முகமெல்லாம் சிவந்து வெளிய போயிடுவ... இன்னைக்கு அதையும் தாண்டி நிக்கிற... அப்படின்னா உன் ஃபிரண்டைக் காப்பாத்துறதுக்காக என் கூடப் படுன்னு சொன்னாலும் படுப்ப அப்படித்தானே?" எனக் கேட்க, முகம் வெளிற அவனைப் பார்த்தாள் அவந்திகா...

👉👉👉👉லட்சக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉👉
41 🌺தழல் நதியில் பூத்த செங்காந்தள் 🥀,

https://pratilipi.app.link/9Ok2T9Dhm5b

வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

"அது இவளோட இஷ்டம்... இவதானே செலக்ட் பண்ணினா? இத்தனை வருஷமா லவ் பண்ணியிருக்கா..." என விஷாலினியை திரும்பி கூட பார்க்காமல் ...
05/08/2026

"அது இவளோட இஷ்டம்... இவதானே செலக்ட் பண்ணினா? இத்தனை வருஷமா லவ் பண்ணியிருக்கா..." என விஷாலினியை திரும்பி கூட பார்க்காமல் சத்யா கூறியதும் அவளின் கண்கள் கலங்கின... அவளால் எந்தப் பதிலும் கூற முடியவில்லை...

"லூசு போலப் பேசாத சத்யா!"

"வேற என்ன சொல்லச் சொல்ற அண்ணி? காலைல எனக்கு ஒருத்தியைப் பெண் பார்க்கப் போறேன்னு நீ சொல்லியிருக்க... நாலு மணி நேரம் கூட இவளால அதைத் தாங்கிட்டு இருக்க முடியல... ஓடி வந்திருக்கா... ஆனா, நான் இத்தனை வருஷமா இவ அவன் கூடச் சுத்துறதைப் பார்த்துட்டு, இவ சொன்ன காதல் கதைகளைக் கேட்டுட்டு, இவ வருத்தப்பட்டுடுவான்னு இவ கூடவே சுத்தியிருக்கேன்... என் மனசு எப்படிச் செத்து இருக்கும், சொல்லு?" என்றதும், அவனைத் தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்த விஷாலினியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது...

வெளிப்படையாகக் காதலித்ததை அவன் ஒத்துக்கொண்ட தருணம்... அதற்காக மகிழக் கூட அவளால் முடியவில்லை...

"நீ சொல்றதும் சரி தான் டா... இவ ஆர்யனையே கல்யாணம் பண்ணிக்கட்டும்!" என விஷாலினியைப் பார்த்துக் கொண்டே ஆழினி கூற,

"இல்லை இல்லை... என்னால முடியாது! நான் கல்யாணமே பண்ணிக்க வேண்டாங்கிற முடிவுக்கு வந்துட்டேன்... நான் இப்படியே இருந்துட்டுப் போறேன்.." என கண்களை வேகமாக துடைத்துக் கொண்டு கூறினாள் விஷாலினி...

"சரி ஓகே... நீ கல்யாணம் பண்ணாம இருந்துக்க... சத்யாவுக்கு நாங்க வேற கல்யாணம் பண்ணி வைக்கிறோம்..." என்றதும், அவளைப் பரிதாபமாகப் பார்த்தாள்...

"ரொம்ப மிரட்டாதடி" எனச் சிம்மன் கூற,

"சும்மா இருங்க அத்தான்! இத்தனை வருஷமா என் சத்துப் பையன் எவ்வளவு வருத்தப்பட்டுருப்பான்? இப்போ அவன் வேணும்னு நினைச்சா இவ தான் அதுக்காக போராடணும்..."

"நீ சொல்றதும் சரிதான்... ஆரியனை கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லி வீட்டில் எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு... இனி சத்யாவை கல்யாணம் பண்ண போறேன்னு அவ்வளவு ஈஸியா சொல்ல முடியாதுல்ல...." என சிம்மன் கூறியதும் மீண்டும் அங்கு அமைதி நிலவியது...

இடியாப்பச் சிக்கல் போல மாறியிருந்த இந்தப் பிரச்சினையிலிருந்து மீண்டு வரவே முடியாதது போல் தோன்ற, சத்யாவும் விஷாலினியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தனர்...

👉👉👉👉லட்சக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉👉
77 💖 ராட்சசனின் ரகசிய காதலி✨✨✨✨,

https://pratilipi.app.link/ADwkkf9Lk5b

வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

"நீங்க தேவையில்லாம பேசுறீங்க சர்வா... உங்ககிட்ட வேலை பாக்குற எல்லார்கிட்டயும் இப்படித்தான் சொல்வீங்களா?"​"என்கிட்ட வேலை ...
05/08/2026

"நீங்க தேவையில்லாம பேசுறீங்க சர்வா... உங்ககிட்ட வேலை பாக்குற எல்லார்கிட்டயும் இப்படித்தான் சொல்வீங்களா?"

​"என்கிட்ட வேலை பார்த்தவ எவளும் 'என்னை எடுத்துக்க, என்னை எடுத்துக்க'ன்னு என்கிட்ட கெஞ்சினது இல்ல," என்றதும்,

​"நாம லவ் பண்ணினோம் சர்வா, என்னோட காதலுக்காக அப்படி சொன்னேன்... அதைப்போய் சொல்லிக் காமிக்கிறீங்க?" என வேதனையுடன் கேட்டாள்...

​"ஓ! அப்படியா? நீதான் என்னையே நினைச்சுட்டு இருந்தவ ஆச்சே... அப்படின்னா இப்பவும் என்னைத்தானே லவ் பண்ற, இப்ப எடுத்துக்கவா?" எனத் தன் கூர் விழிகளால் அவளையே பார்த்துக் கொண்டு பேச, அதற்கு மேல் அவனிடம் பேசிப் பலனில்லை என உணர்ந்தவள் திரும்பி நடக்கத் தொடங்கினாள்...

​"எப்பவும் போல திமிர்ல வேற டிரஸ் போட்டேன்னு வச்சுக்க... அந்த டிரஸைக் கிழிச்சு எறிஞ்சிட்டுப் புதுப் புடவையை நானே கட்டி விட வேண்டியதா இருக்கும்!" என அவன் கூற, எதுவுமே பேசாமல் அறையை விட்டு வெளியேறினாள்...

​அவந்திகாவிற்கு கிளம்ப விருப்பமே இல்லை... 'நவ்யா தேடிக் கொண்டிருப்பாளே' என அது வேறு கவலையாக இருந்தது... அவனிடம் அடங்கிப் போகப் போக அவளின் கோபம் கூடிக் கொண்டே இருந்தது...

​ஒன்று போல் உடை வாங்கியிருந்ததைப் பார்த்ததும் ஸ்ரேயாஷி உற்சாகத்தில் குதித்து விட்டாள்... "மம்மி-டாட்டர் காம்போ அவந்திம்மா... நான் ரொம்ப ஹாப்பி!" எனக் கூறிக்கொண்டு உற்சாகமாக அவள் கிளம்பினாள்...

​படகில் ஏற அவள் தடுமாற, போன் பேசிக் கொண்டே சர்வன் தன் கையை நீட்ட, கண்டு கொள்ளாமல் ஏறிப் படகின் ஓரத்தில் அமர்ந்தாள்...

​தான் வாங்கிக் கொடுத்த உடையை அணிந்து அவள் வந்ததும் சர்வனுக்கு நிம்மதியாக இருந்தது...

​படகு நவ்யாவின் வீட்டுப் பாதையில் செல்வதைப் பார்த்ததும் அவளுக்கு வேதனையாக இருந்தது... 'சாரிடி, இறங்கி ஓடிக் கூட வர முடியாது, சாரி...' என மனதுக்குள் புலம்பிக்கொண்டே அமர்ந்திருந்தாள்...

​படகு நவ்யா வீடு இருந்த அதே தீவின் ஓரத்தில் நிற்க, 'ஹேய்! இங்கதான் ஃபங்க்ஷனா? அப்படின்னா மெதுவா இவங்ககிட்ட இருந்து எஸ்கேப் ஆகி நவி வீட்டுக்கு ஓடிப் போய் பாத்துட்டு வந்துடலாம்!' என ஒரு நொடியில் உற்சாகமாக கணக்கிட்டுக் கொண்டு இறங்கினாள்...

​படகில் இருந்து இறங்கியதும் புது மாப்பிள்ளை போல் நின்றிருந்த சச்சினை வேகமாகச் சென்று அணைத்து விடுத்தான் சர்வன்...

​'இவன் என்ன புது மாப்பிள்ளை போல நிக்கிறான்?' என அவந்திகா பார்த்துக்கொண்டு நின்றபோதே, "வாங்க மாப்பிள்ளை... வாங்க சம்மந்தி..." என முகம் மலர சிரிப்புடன் வந்து வரவேற்ற நவ்யாவின் அப்பாவையும் அண்ணனையும் பார்த்தவள் அதிர்ச்சியில் கண்களை விரித்தாள்...

👉👉👉👉லட்சக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉👉
40 🌺 தழல் நதியில் பூத்த செங்காந்தள்🥀,

https://pratilipi.app.link/8KW92Cwvk5b

வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

நிலத்தில் விழும் மழையை விட, ஆழமான காயல் நீரில் விழும் மழை அவந்திகாவிற்கு மிகவும் பிடிக்கும்... மேகங்களிலிருந்து விடுபடும...
05/08/2026

நிலத்தில் விழும் மழையை விட, ஆழமான காயல் நீரில் விழும் மழை அவந்திகாவிற்கு மிகவும் பிடிக்கும்... மேகங்களிலிருந்து விடுபடும் ஒவ்வொரு மழைத்துளியும், காயல் நீரின் மீது பாயும் கூர்மையான அம்புகளைப் போலக் கொட்டுவதை மிகவும் ரசிப்பாள்...

அந்நேரம் ​வானத்தைப் பிளந்துகொண்டு வந்த மின்னல், ஒரு நொடியில் ஒட்டுமொத்த காயலையும் வெளிச்சத்தில் மூழ்கடித்தது... சுற்றியிருந்த தென்னை மரங்களும், காயலின் நடுவே இருந்த பெரிய மரத்தின் மேல் அமர்ந்திருந்த நீர்ப்பறவைகளும் மின்னலின் வெளிச்சத்தில் பளிச்சிட்டு மீண்டும் இருளுக்குள் மறைந்த காட்சியில் மெய்மறந்துபோய் நின்றாள்...

​மின்னலைத் தொடர்ந்து வந்த இடிமுழக்கத்தில் அவளின் உடல் ஒரு நொடி அதிர, அவளை அணைத்துக்கொள்ள வேண்டும் போல் பரபரத்த தன் கைகளைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்தினான்...

​இந்த இருட்டும் மழையும் அவளுக்கு மிகவும் பிடிக்கும்... ஆனாலும் முன்பெல்லாம் தனிமையில் அந்த இருட்டை ரசிக்கப் பயப்படுவாள்... இன்றோ அவன் அருகாமையில் ஏதோ தைரியம் வந்தது போல் இருந்தது... நின்று நிதானமாக ரசித்துக்கொண்டே டீயைக் குடித்தாள்...

​"நல்லா இருக்குதுல்ல?" எனக் கேட்டான்...

​மிக அருகில் கேட்ட அவனின் ஆழ்ந்த குரலில் மெய்மறந்தவள், "ம்ம்ம்... இந்த காயல் பக்கம் வந்ததுல இருந்து இப்படி ஒரு ராத்திரி வராதான்னு காத்துட்டு இருந்தேன்.." என்றவளைக் காதலுடன் பார்த்தான்...

​"நீ, நான், இந்த காயல், தனிமை, மழை, ஒரு கப் டீ..." எனச் சொல்ல வந்த வார்த்தைகளை வாய்க்குள்ளேயே அடக்கிக்கொண்டு மழை ரசித்துக்கொண்டிருந்தான் அவன்...

"டீக்கு ரொம்ப தேங்க்ஸ்," எனக் கூறிவிட்டு ஸ்ரேயாஷியிடம் சென்று அமர்ந்தாள்...

👉👉👉👉ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉👉
39 🌺 தழல் நதியில் பூத்த செங்காந்தள்🥀,

https://pratilipi.app.link/SK34bR6id5b

வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

காரை நிறுத்திவிட்டு இறங்குவதற்காகக் கதவின் கைப்பிடியில் கை வைத்தவள், அப்படியே ஸ்தம்பித்துப் போனாள்...!         வெளியே......
05/08/2026

காரை நிறுத்திவிட்டு இறங்குவதற்காகக் கதவின் கைப்பிடியில் கை வைத்தவள், அப்படியே ஸ்தம்பித்துப் போனாள்...!

வெளியே... ஓரமாக நின்றிருந்த மரத்தில் ஒரு காலை ஊன்றிச் சாய்ந்தபடி, கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா..! அவன் விரல்களுக்கிடையே சிகரெட் புகைந்துகொண்டிருந்தது...

'இவன் ஏன் இங்கே வந்து நிற்கிறான்? ஸ்மோக் கூடப் பண்ணிட்டு இருக்கான்...' என நினைத்தவள், கைகள் நடுங்க போனை எடுத்து அவனுக்கு அழைத்தாள்...

தன் பாக்கெட்டில் அதிர்ந்த போனை எடுத்துப் பார்த்த சத்யா, திரையில் மிளிர்ந்த 'ஆட்டுக்குட்டி' என்ற பெயரைக் கண்டதும் திகைத்தான்...

தன் நெஞ்சைத் தடவிப் பாரத்தை இறக்க முயன்றவன், போனைத் துண்டிக்கவும், அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த விஷாலினியின் கண்களில் கண்ணீர் கட்டியது. 'அப்போ நிஜமாவே நீ என்னை லவ் பண்ணிருக்கியா? ஏன்டா சொல்லல?' என வாய்விட்டுப் புலம்பியவள், மீண்டும் அவனுக்கு அடித்தாள்...

இந்த முறை ஒரு நீண்ட பெருமூச்சுடன் போனை அட்டெண்ட் செய்தவன், "சொல்லு... எதுக்கு போன் பண்ண?" என எந்தவித உணர்ச்சியுமற்ற குரலில் கூறினான்...

அவன் அழைப்பில் வழக்கமாக இருக்கும் 'ஆட்டுக்குட்டி', 'விஷாலி' போன்ற பெயர்கள் அனைத்தும் மொத்தமாக விடுபட்டிருந்ததை உணர்ந்த நொடி, மொத்தமாக உடைந்து போனாள்...

பெரிய பெரிய மூச்சுகள் எடுத்து தன்னை சமன்படுத்திவிட்டு , "எனக்கு... உன்னைப் பார்க்கணும்...." என்றாள்...

" முக்கியமான வேலை இருக்குது... இன்னைக்குப் பார்க்க முடியாது..." என கடலின் மீதிருந்த பார்வையை விலக்காமல் சொன்னான் சத்யா...

காரின் ஸ்டீயரிங் வீலில் தலையைச் சாய்த்துக் கொண்டு, அவனையே வேதனையோடு பார்த்தவள், "ப்ளீஸ்... ஒரு பத்து நிமிஷம் மட்டும் நாம மீட் பண்ற ரெஸ்டாரண்டுக்கு வர முடியுமா?" எனக் கேட்டாள்...

"நான் முக்கியமான வேலையா வெளியே வந்திருக்கேன்... அவ்வளவு தூரம் வர முடியாது..."

"எனக்காக..." என்றவள் கூற தன்நெஞ்சை தடவி விட்டுக்கொண்டு அப்படியே நின்றவன் பின்,

👉👉👉👉லட்சக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉👉
76 💖ராட்சசனின் இரகசிய காதலி✨✨✨✨,

https://pratilipi.app.link/v7vKAJV3b5b

வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

"யாரா இருந்தா எனக்கென்ன? எனக்கு தேவை பணம்... அதுக்கு வட்டியும் அசலும் என்னால கட்ட முடியும்.." என அசட்டையாகப் பதிலளித்தாள...
05/08/2026

"யாரா இருந்தா எனக்கென்ன? எனக்கு தேவை பணம்... அதுக்கு வட்டியும் அசலும் என்னால கட்ட முடியும்.." என அசட்டையாகப் பதிலளித்தாள்...

​"ஒரு மாசம் நான் சம்பளம் தரலன்னா என்ன பண்ணுவ நீ?" என அவளை முறைத்து பார்த்துக் கொண்டு சர்வன் கேட்க அதிர்ந்துபோய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்...

​"என்கிட்ட வேலை பார்க்கிற எல்லாருக்கும் ஒண்ணாம் தேதியிலிருந்து அஞ்சாம் தேதிக்குள்ள சேலரின்னு அப்பாயின்மென்ட் ஆர்டர்லயே மென்ஷன் பண்ணிருப்பேன்... நீ ஒண்ணாம் தேதி சாயந்திரம் 6 மணிக்குள்ள வட்டியை கொடுப்பேன்னு எழுதி கொடுத்திருக்க! ஒரு நாள் வட்டி கட்ட லேட் ஆனாலும் உன்னை தூக்கிட்டு போயிடுவான் அவன்... இந்தக் காயல்ல ரவுடி, பொறுக்கி எல்லாமே பிளேடு பிரகாஷன் மட்டும்தான்... இடியட்! அறிவில்ல உனக்கு?" என கோபத்துடன் கத்தினான்...

​சர்வன் கூறியதை கேட்டதும் பயமாகத்தான் இருந்தது... ஆனாலும் அவனிடம் இறங்கி பேச விரும்பாதவள் எரிச்சலுடன் "அதுக்கெல்லாம் நான் ஏற்பாடு பண்ணிட்டேன்... இதைப் பற்றி பேசுறதுக்குதான் கூப்பிட்டீங்கன்னா நான் கிளம்புறேன்..." எனக் கூறி திரும்ப, வேகமாக எழுந்து அவள் முன்னே வந்து நின்றான்...

​"நான் பேசிட்டு இருக்கேன்... நீ பாட்டுக்கு போற... அவ்வளவு தைரியம் வந்துடுச்சா உனக்கு? உனக்கு பணம் தேவைன்னா என்கிட்ட கேட்டு இருக்க வேண்டியதுதானடி!"

​"இங்க பாருங்க சார்.. இது என்னோட தனிப்பட்ட விஷயம்... ஏற்கனவே வெத்து பேப்பர்ல போட்டுக் கொடுத்த கையெழுத்துக்காகதான் இங்க வேலைக்காரியா இருக்கேன்... இதுக்கு மேல பணமும் வாங்கி அவமானப்பட நான் தயாராக இல்லை!" என அவந்திகா கூற, இருவருக்குமான வாக்குவாதம் நீண்டது...

நீண்ட நேரம் பேசி பார்த்தவளுக்கு அன்று மயக்குவதாகக் சர்வன் கூறியது நினைவுக்கு வர, அந்த கோபத்தில், "தயவு செஞ்சு தள்ளி நின்னு பேசுங்க! நீங்க பக்கத்துல வந்தாலே அழுக்குன்னு ஃபீல் ஆகுது!" என எரிச்சலுடன் கூறினாள்...

​"நான் அழுக்கா? உன்னை எல்லாம் வந்த நாளிலேயே கசக்கி எறிஞ்சிருக்கணும்டி! அப்படின்னா இந்த பேச்சு நீ பேச மாட்ட!" என பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவனுக்கு, அவள் கஷ்டப்பட்டால் மட்டுமே ஷ்ரத்தா கண்விழிப்பாள் என சரத் மீண்டும் மீண்டும் கூறியது நினைவுக்கு வர, வேகமாக அவளை இழுத்து அணைத்தான்...

​"எப்பவும் இதே வேலையா போச்சு சர்வா உங்களுக்கு! கோபம் வந்தா உடனே கட்டிப்பிடிக்கிறது, கிஸ் பண்றதுன்னு ஏதாவது பண்ணிட்டு, அதுக்கப்புறம் என்னை பிளேம் பண்றது! தள்ளி போங்க, நீங்க பக்கத்துல வந்தாலே அருவருப்பா இருக்குது!" என்றவளின் வார்த்தைகளால் கோபத்தின் உச்சிக்கே சென்றான்...

👉👉👉👉ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉👉
38🌺 தழல் நதியில் பூத்த செங்காந்தள்🥀,

https://pratilipi.app.link/sj0dFmiga5b

வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

'நிச்சயதார்த்தத்தையே ஏத்துக்க முடியாம அழுது கெஞ்சி கூத்தாடி தள்ளி வைக்கச் சொல்லியிருக்கேன்... இதுல உடனே கல்யாணமா?' என நி...
05/08/2026

'நிச்சயதார்த்தத்தையே ஏத்துக்க முடியாம அழுது கெஞ்சி கூத்தாடி தள்ளி வைக்கச் சொல்லியிருக்கேன்... இதுல உடனே கல்யாணமா?' என நினைத்தவள், அவனை அதிர்ந்து பார்த்தாள்...

​"என்ன அப்படி பாக்குற?"

​"இல்லை, அம்மா அப்பா ரொம்ப வருத்தப்படுவாங்க... என்னால அதை ஏற்கவே முடியாது... ஆறு மாசம் தானே? தயவுசெஞ்சு இப்படி எல்லாம் பேசாதீங்க..." என வேகமாக கூறினாள்...

​"ஓகே, ரிலாக்ஸ்... உன் ஆசைதான் முக்கியம் ஷாலி... நீ என்ன நினைக்கிறியோ அதுதான் நம்ம வாழ்க்கையில் நடக்கணும்... ஏன்னா எனக்கு நீ ரொம்ப முக்கியம்..." என அவள் கையைப் பிடித்துத் தட்டிக்கொடுத்து ஆரியன் கூற, மெதுவாக அவன் கைக்குள் இருந்து தன் கையை உருவி எடுத்தாள் விஷாலினி...

​"ஜோசியர் சொன்னது பொய்யா இருக்கும்னு சொன்னேனே... ஏன்னு கேட்டியா?" என ஆரியன் மறுபடியும் கேட்டதும்,

​"ஆமால்ல, ஏன் அப்படி சொன்னீங்க? அவர் உங்க குடும்ப ஜோசியர் தானே?" எனக் கேட்டாள்...

​"அவர் குடும்ப ஜோசியர்தான்... ஆனா அவரை அந்த சத்யா பிராடு மாத்தியிருப்பான்... அந்த சத்யாதான் எல்லாத்துக்கும் காரணமா இருப்பான்னு நான் நினைக்கிறேன்... அவன் பிராடு!" என பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான் ஆரியன்...

​"சத்யாவா? அவனை ஏன் சொல்றீங்க?" எனக் கேட்டாள் விஷாலினி...

​"ஏன்னா அவன் உன்னை ஒன்சைடா லவ் பண்றான்... இப்ப இல்லை, ஸ்கூல் டேஸ்ல இருந்தே உன்னை அவன் லவ் பண்ணிட்டு இருக்கான்..." என சீற்றத்துடன் ஆரியன் கூற விஷாலினியின் தலை கிறுகிறுவென்று சுற்றியது...

​தலையில் ஒரு கையை வைத்து தாங்கிப் பிடிக்க முயற்சித்தவள், அப்படியே மயங்கி மேஜையின் மேல் கவிழ்ந்து விழுந்தாள்...

👉👉👉👉லட்சக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்து கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉👉
75 💖 ராட்சசனின் ரகசிய காதலி ✨✨✨✨,

https://pratilipi.app.link/NevHcW4784b

வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

"காலையிலேயே மாத்தி மாத்தி இரிடேட் பண்றீங்களா? இந்த வேலை எல்லாம் செய்றதுக்கு இந்த வீட்ல ஒருத்தி உண்டே, அவ எங்க போனா?" என ...
28/07/2026

"காலையிலேயே மாத்தி மாத்தி இரிடேட் பண்றீங்களா? இந்த வேலை எல்லாம் செய்றதுக்கு இந்த வீட்ல ஒருத்தி உண்டே, அவ எங்க போனா?" என சர்வன் கத்த, வேதனையுடன் கண்களை மூடித் திறந்தாள் அவந்திகா...

​'தன் வீட்டில் வேலைபார்க்கும் பெண்களிடம் தன் தாயும் சகோதரியும் இப்படி கோபப்படுவதைப் பார்த்திருக்கிறாள். என்னை முழு வேலைக்காரியா மாத்திட்டீங்கல்ல சர்வா?' என மனத்திற்குள் நினைத்தவள், பெரிய மூச்சுகளை எடுத்துத் தன்னைச் சமன்படுத்திக்கொண்டு வேகமாக அவன் அறையை நோக்கி நடந்தாள்...

​கையில் துணியுடன் வெளியே வந்த பிளெஸ்சி அவந்திகாவைப் பார்த்து, "சார் ரொம்ப 'சூடாயிட்டு' இருக்காரு, பார்த்து காரியம் செய்யி சேச்சி..." எனக் கூறிவிட்டு வேகமாக ஓடிவிட, தயக்கத்துடன் அவன் அறைக்குள் நுழைந்து மேஜையில் துணியை வைத்துக்கொண்டு திரும்பினாள்...

​"உனக்கான வேலையெல்லாம் நீதான் செய்யணும்... அதை விட்டுட்டு என்னை மயக்குற வேலையைப் பாக்குறதுக்கு மட்டும் அலையாத..!" எனப் பல்லைக் கடித்துக்கொண்டு கூற, அவனிடம் மதிகெட்டு மயங்கி நின்றதை நினைத்து அவமானத்துடன் கண்களை மூடித் திறந்தவளின் உதடுகள் ​அழுகையில் நடுங்கின...

​"வெளியே போடி! நான் டிரஸ் மாத்தணுமா, வேண்டாமா? இல்ல அதையும் பாக்கணும்னு நினைக்கிறியா?" எனப் பல்லைக் கடித்துக்கொண்டு அவன் கேட்க, சட்டென்று அறையை விட்டு வெளியேறியவளால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை...

​தன்னுடைய அறைக்குச் சென்று முகத்தை தண்ணீரால் அடித்துக் கழுவிவிட்டு, வேகமாக ஸ்ரேயாஷியின் அறைக்குள் சென்றாள்...

​"அச்சோ அவந்தி ம்மா, என்னாச்சு உங்களுக்கு? ஃபீவரா? கண்ணெல்லாம் சிவந்திருக்கு" என அவள் நெற்றியையும் கழுத்தையும் தன் சின்னஞ்சிறு கைகளால் தொட்டுப் பார்த்து ஸ்ரேயாஷி கேட்க,

"ம்ம்ம்... லேசா ஃபீவர்" என மென்மையாகச் சிரித்துவிட்டு அவளைக் கிளப்பத் தொடங்கினாள்...

​அவளைக் கிளப்பிக்கொண்டிருக்கும்போதே வேகமாக அறைக்குள் வந்த சர்வன், ஸ்ரேயாஷிக்கு முத்தம் கொடுத்துவிட்டு, "பேக் எடுத்துக் கொடு..." எனக் கூறிவிட்டு வேக எட்டுக்களுடன் வெளியேறினான்...

பெருமூச்சுடன் வெளியே வந்து அவனுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொடுத்துவிட்டு, ஸ்ரேயாஷியைப் பள்ளிக்குக் கிளப்பி அனுப்பினாள்...

​இதற்கு முன்பும் பல நாட்கள் அவன் கோபப்பட்டிருக்கிறான்; ஆனால் இன்றுதான் முதன்முறையாக அவமானப்பட்டதுபோல் உணர்ந்தாள் அவந்திகா!

👉👉👉👉ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருக்கும் இக்கதையை படிக்க👉👉👉👉
37 🌺 தழல் நதியில் பூத்த செங்காந்தள்🥀,

https://pratilipi.app.link/HNkMQLbZ84b

வாசிக்க கதையின் மேல் க்ளிக் செய்யவும்

#வானதிநாவல்கள் #ஆன்டி_ஹீரோ_கதை

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vanathi Faizal Novels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category