The Book Thief's Secret Shelf

The Book Thief's Secret Shelf Never give up

"...never give your child a book you would not read yourself."~ George Bernard ShawWe are happy to announce that Thumbi ...
17/12/2025

"...never give your child a book you would not read yourself."
~ George Bernard Shaw

We are happy to announce that Thumbi Children’s Magazine is having a Stall
at the Hyderabad Book fair happening from Dec 19-29, 01:00 Pm - 09:00 Pm
at NTR Stadium ( opp to Indira Park )

*Stall no: 241*

For more information call at +91 82702 22007

தும்பி

❣️மகிழ் புத்தக அங்காடி
08/11/2025

❣️

மகிழ் புத்தக அங்காடி

09/10/2025

❣️

நல்வாழ்த்துகள்❤️
27/09/2025

நல்வாழ்த்துகள்

❤️

தேநீர் சுவையால் மட்டுமல்ல..திகட்டத்திகட்டதோழமையின் வாஞ்சையிலும் உச்சம் தொட்ட தோழர் ரவியை..நினைவுகூர ஒரு தருணம்.அவசியம் வ...
27/09/2025

தேநீர் சுவையால் மட்டுமல்ல..
திகட்டத்திகட்ட
தோழமையின் வாஞ்சையிலும்
உச்சம் தொட்ட தோழர் ரவியை..

நினைவுகூர ஒரு தருணம்.
அவசியம் வாங்க...

வரும்
ஞாயிறு காலையை
#தோழர்_ரவிக்காக
ஒதுக்குங்கள்.

செய்தியை
பரவலாக்கி
உதவுங்கள்.

அவசியம் நிகழ்வில் பங்கெடுத்து
நினைவுகள் பகிர வாருங்கள்.
🙏🙏🙏

#பதியம்
திருப்பூர்.

ராஜு தான் இந்தப் புத்தகத்தைக் கொடுத்தான்.  ‘HORTON HEARS A WHO !' . Dr. Seuss எழுதியது. ‘ உங்களுக்குப் பிடிக்கும் பா. பட...
26/09/2025

ராஜு தான் இந்தப் புத்தகத்தைக் கொடுத்தான். ‘HORTON HEARS A WHO !' . Dr. Seuss எழுதியது. ‘ உங்களுக்குப் பிடிக்கும் பா. படிச்சுப் பாருங்க’ என்று நேற்று இரவு கொடுத்தான். இன்று அதிகாலை படித்தேன். பிடித்திருந்தது. ரொம்பப் பிடித்திருந்தது.

ஹோர்டன் என்கிற யானை. ஒரு சிறு தூசு, துரும்பின் மேல் கிடக்கிற ஒரு சின்னஞ்சிறு சிவப்புப் பூவைப் பார்க்கிறது, அந்தச் சிறு பூ பேசுவதைக் கேட்கிறது. தனக்குள் ஒரு உலகம் இருப்பதாக, மனிதர்கள் இருப்பதாக பூ சொல்வதை நம்புகிறது. காப்பாற்ற நினைத்துத் தன் தும்பிக்கையிலேயே அந்தப் பூவை ஏந்தியபடி காடெல்லாம் திரிகிறது.

பார்க்கிற கங்காரு, கங்காருக் குட்டி, குரங்குகள் எல்லாம் யானையைக் கேலி செய்கின்றன. அதற்குக் கிறுக்கு என்று சொல்கின்றன. யானை அந்தப் பூவிடம் அதற்குள் இருக்கும் உலகத்து மனிதர்களைக் குரல் எழுப்பச் சொல்கிறது. அந்த ஊரின் ‘நகரத் தந்தை’ எல்லோரையும் ஒருங்கிணைத்து எல்லோரும் எழுப்பும் ஓசை யானைக்குக் கேட்கிறது. கங்காரு, அதன் குட்டி, குரங்குகளுக்குக் கேட்பதில்லை.

யானை மறுபடி பூவிடம் சொல்கிறது. உனக்குள் இருக்கும் உலகத்தில் யாரோ ஒரே ஒருவரின் குரல் இதில் சேரவில்லை. அது இணைந்தால் சரியாகிவிடும் என்று அது சொல்வதைக் கேட்ட பூ , அதை நகரத் தந்தையிடம் சொல்ல, அவர் அந்த உள் உலகத்தின் வீடு வீடாகச் சென்று, யாராவது ஊரோடு சேராமல் தனித்து விலகியிருக்கிறார்களா என்று பார்க்கிறார்.

ஒரு குட்டிப் பையன், அவனுடைய வீட்டில் அவன் போக்கில் குதித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறான். நகரத் தந்தை
அவனிடம் அவன் குரலின் அவசியத்தை, எல்லோருடனும் சேர்ந்து அவன் குரல் எழுப்பவேண்டியதன் முக்கியத்தைச் சொல்கிறார். அவனும் தன் தொண்டையைச் செருமிக் கொண்டு சத்தம் போட ஆரம்பிக்கிறான்.

அந்த ஒரே ஒரு இளம் குரல், அந்த உள் உலகத்தோரின் மொத்தக் குரலுடன் இணைந்ததும், காடே அதிர அதிர, எல்லோர்க்கும் கேட்கிறது. ‘உண்மைதான். எனக்குக் கேட்கிறது’ என்று கங்காரு சொல்கிறது. கங்காருக்குட்டி, ‘எனக்கும் கேட்கிறது. நானும் உன்னுடன் சேர்ந்து அந்தப் பூவைக் காப்பாற்றப் போகிறேன்’ என்கிறது.

‘ A PERSON IS A PERSON. NO MATTER HOW SMALL' - இதுதான் கதையின் குரல். கதையின் நீதி. ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’, ‘சிறியாரெல்லாம் சிறியாரல்லர்’ ‘சிறியாரென்று இகழ்தலும் இலமே’ என்று எப்படியெல்லாமோ நாம் அறிந்த ஒன்றுதான்.

-வண்ணதாசன்

”A man who, at 95 years old, runs a bookstore that has been open for many decades in Paris. Despite his age, taxes, and ...
18/09/2025

”A man who, at 95 years old, runs a bookstore that has been open for many decades in Paris. Despite his age, taxes, and various difficulties, this man opens his bookstore six days a week, with extraordinary passion and skill.“

❣️

Makhdoom Bilawal Library Islamkot

பாடுவது எனக்குப் பிரியமானது என்பதாலோஎனக்குக் குரல் வளம் இருப்பதாலோ நான் பாடுவதில்லை.எனது கிதாரிடம் உணர்ச்சியும் அறிவும் ...
16/09/2025

பாடுவது எனக்குப் பிரியமானது என்பதாலோ
எனக்குக் குரல் வளம் இருப்பதாலோ
நான் பாடுவதில்லை.
எனது கிதாரிடம் உணர்ச்சியும் அறிவும் இருப்பதால்
பாடுகிறேன்.
மண்ணின் இதயமும் புறாவின் சிறகுகளும்
கொண்டது எனது கிதார்
மகிழ்ச்சியையும் துயரத்தையும்
ஆசீர்வதிக்கும் புனித நீர் அது.
வயெலெட் கூறுவது போல
எனது பாடலுக்குக் குறிக்கோள் உண்டு
கடினமாக உழைக்கும் கிதார்
வசந்தத்தின் நறுமணம் கமழும் கிதார்.

எனது கிதார் செல்வந்தர்களுக்கானது அல்ல, இல்லை
நிச்சயமாக இல்லை
எனது பாடல் நட்சத்திரங்களை அடைவதற்காக
நாம் கட்டிக் கொண்டிருக்கும் ஏணி.
ஏனெனில், ஒரு பாடல் பொருள்கொள்வது
தனது பாடலை உளப்பூர்வமாகப் பாடிக்கொண்டே
மரிக்கின்ற ஒருவனின் நாளங்களில்
அது துடிக்கும்போதுதான்.

எனது பாடல் நொடியில் தோன்றி மறையும்
பாராட்டுக்கானது அல்ல
வெளிநாட்டுப் புகழைப் பெறுவதற்கானதுமல்ல
அது இந்தக் குறுகிய நாட்டுக்கானது
புவியின் அடியாழங்களுக்கேயானது
அங்கேதான் எல்லாமே
ஓய்வு கொள்ள வந்து சேருகின்றன
அங்கேதான் எல்லாமே தொடங்குகின்றன
தீரமிக்கதாய் இருந்த பாடல்
அங்கேதான்
என்றென்றும் புதிய பாடலாகவே இருக்கும்.

🌿

விக்டர் ஹாரா

தமிழில் - எஸ்.வி.ராஜதுரை
..

* வயலெட் - வயலெட்டா பர்ரா

உனக்கென்ன பைத்தியமா?அச்சிறுமியின் தந்தையின் செயல், தாய்க்கு ஒரு நேரத்தில் பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறது. இன்னொரு இடத்த...
16/09/2025

உனக்கென்ன பைத்தியமா?

அச்சிறுமியின் தந்தையின் செயல், தாய்க்கு ஒரு நேரத்தில் பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறது.

இன்னொரு இடத்தில் வேறு ஒருவரும், சிறுமியின் தந்தையிடம் கேட்காமல், ஆனால் தன் உடல்மொழியாலேயே உனக்கென்ன பைத்தியமா என்கிறார்.

ஆம் தங்கள் குழந்தைகளின் ஏக்கங்களை, வலிகளை, வேதனைகளை, புரிந்துகொண்டு அவற்றை சீர்செய்யத் துடிக்கும், குழந்தைகளை மீட்கத் தவிக்கும் ஒவ்வொரு தாயும், தகப்பனும் பைத்தியக்காரர்கள்தான்.

அப்படிப்பட்ட ஒரு பைத்தியமாக வாழவே விரும்புகிறேன்.

அப்படியாகவே இருப்பேன்.



🌱

கதை : யானை .

ஒரு சோவியத் சிறுகதையைப் படிக்கிறேன் என்ற மகிழ்ச்சியை இறுதிவரை உணரவைத்த பெருமை மொழிபெயர்ப்பாளருக்குச் சேரும்.

தோழர் சாலை செல்வம் தனது எழுத்து, படிப்பு, களச்செயல்பாட்டு அனுபவங்களின் செழுமையில் இந்தக்கதையை மிகச்சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.

குப்ரினின் செம்மணி வளையல் படித்துத் துடிக்காத இலக்கிய இதயங்களே இல்லை.

முதல்முறையாக தமிழுக்கு குப்ரினின் யானை சிறுகதை மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.

அதுவும் சோவியத் நாட்டில் அச்சாகி, தமிழில் வெளிவந்த புத்தகங்களைத் தழுவி, சுவாசித்து வாழ்ந்து வரும் எண்ணற்ற மனிதர்களுக்கு இந்த நூல் அதன் வடிவமைப்பு, அச்சாக்கம், தாள்கள் என பலப்பல நினைவுகளை மீட்டும் நிச்சயம்...

ஆகவே படிப்பதைத் தள்ளிப்போடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அரை மணிநேரத்தில் படித்துவிட முடியும். உடனே வாங்கிப் படிக்கக்கூடிய, படிக்க வேண்டிய சின்னஞ்சிறு புத்தகம்.

வாசகர்கள் : யானை சிறுகதையைப் படித்துவிட்டு பைத்தியம் ஆகிறீர்களோ இல்லையோ, சக மனிதர்களுக்கு கட்டாயமாக அறிமுகப்படுத்துங்கள்.

இந்த சின்னஞ்சிறு யானை புத்தகத்தை மிகவும் தேவைப்பட்ட காலத்தில் வெளியிட்ட குட்டி ஆகாயம் பதிப்பகம், மொழிபெயர்ப்பாளர், இதனை அனைவருக்கும் கொண்டு சேர்க்க விரும்பும் அனைவருக்கும்,
அன்பும் பிரியமும்

❣️

மொழிபெயர்ப்பாளர் : சாலை செல்வம்

கதை மூல ஆசிரியர் : அலெக்சாந்தர் குப்ரின், ரஷ்யா.

பதிப்பாளர் : வெங்கட்

நூல் வேண்டுவோர் தொடர்புகொள்க :

குட்டி ஆகாயம் பதிப்பகம்

9843472092

மகிழ் புத்தக அங்காடி

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Book Thief's Secret Shelf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category