15/01/2017
இந்தியாவில் ஆண்டுதோறும் 6 கோடியே 20 லட்சம் டன் திடக்கழிவு வெளியாகிறது. ஆனால் 4 கோடியே 30 லட்சம் டன் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. இதில் ஒரு கோடியே 20 லட்சம் டன் மட்டுமே மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மற்றவை அப்படியே கழிவாகக் கொட்டி வைக்கப்படுகிறது.இவ்விதம் கொட்டப்படும் கழிவுகள் 2050-ம் ஆண்டில் 43 கோடி டன்னாக குவிந்து விடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கழிவுகளில் 45 லட்சம் டன் கழிவுகள் மிகவும் அபாயகரமான கழிவுகளாகும். இவற்றில் மருத்துவக் கழிவுகளும் அடங்கும். 30 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளும், 32 லட்சம் டன் மின்னனு சார்ந்த கழிவுகளும் ஆண்டுதோறும் வெளியாகிறது.