16/10/2015
தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ .. albert einstein ..
தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.கொடிய ரசாயனங்களின் தீமைகளை அறியவும், அழிவிலிருந்து காத்துக்கொள்ளவும் தேனடை களின் அழிவு நமக்கு நல்லதொரு பாடமாக இருக்கிறது.
தேன் கூடுகளின் எண்ணிக்கை குறைய ஒன்றல்ல, பல காரணங்கள் இருக்கின்றன.
1. பயிர்களைக் காக்க நாம் தெளிக்கும் பூச்சிக் கொல்லிகள்தான் முக்கிய காரணமாக இருக்கிறது.
2. கரையான்கள், பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், வைரஸ் பூச்சிகள், இதர நோய்த் தொற்றுகள் தேன் கூட்டை அணுகக் கூடாது என்று தேனீ வளர்க்கும் தொழில்செய்வோர் இந்த ரசாயனங்களைக் கூடுகளுக்குள்ளும் தெளிக்கின்றனர்.
ஒரு தேன் கூட்டை எடுத்து ரசாயன ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவை சேகரித்த தேனில் 120 வகை பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் கிடைத்தன. தனித்தனியாக அந்தத் தேன் துளிகளை ஆராய்ந்தால், தீங்கு செய்யாத நல்ல தன்மையுடனேயே இருக்கின்றன. ஆனால், ஒட்டு மொத்தமான தேனோ தீமைதரும் ரசாயனங்களின் கூட்டுக் கலவையாகத் திகழ்கிறது. இந்த அளவானது தேனீக்களின் நோய் எதிர்ப்புத் திறனை அறவே குலைத்துவிடும். அதன் அடுத்த கட்டமாக தேனீக்கள் அழிவும் தொடங்கிவிடும்.
உலகில் உள்ள தேனீ இனம் ஒட்டுமொத்தமாக அழிந்தால், அது மட்டுமல்ல - அதனுடன் சேர்ந்து நாமும் மிகச் சில வருடங்களிலேயே இறந்துபோவோம், அயல் மகரந்தச் சேர்க்கை தடைபடுவதால்!
பயிர்களுக்குத் தெளிக்கும் பூச்சிக் கொல்லிகள் நாம் கொல்ல நினைக்கும் பூச்சிகளை மட்டும் கொல்வதில்லை. நமக்கு உறுதுணையாக உள்ள பூச்சியினங்களையும் அழிக்கவல்லவை. மறைமுகமாக நம்மை நாமே அழித்துக்கொள்ளக் காரணமாக இருப்பவை.
தேனீக்களின் எண்ணிக்கை குறைவதால், மனித இனத்துக்கு நேரக்கூடிய ஆபத்தும் சேர்ந்தே வெளிப் படுகிறது. இயற்கையோடு சமநிலையைப் பராமரிப்பதன் மூலமே நாம் வாழ முடியும். காட்டுத்தாவரம், தேனீ, மனிதன் மூவருமே உயிர்ச் சங்கிலியின் பிணைப்பு. ஒன்று அழிவது மற்றவற்றுக்கு நல்லதல்ல என்பதே உண்மை. நாம் நலமாகவும் வளமாகவும் வாழ தேனீக்களும் வாழ்வது அவசியம்.
thanks ..the hindu
www.bookmyfoliage.com