Yazhalbookshop.in

Yazhalbookshop.in வணக்கம், Welcome to Tamil books online shopping store

இன்றைய நவீன உலகில் அனைவரும் நேரத்தை மிச்சப்படுத்த, வெளியே செல்ல முடியாத சூழல் எனப் பல காரணங்களால் இணையத்தின் பொருள் நுகர...
25/05/2026

இன்றைய நவீன உலகில் அனைவரும் நேரத்தை மிச்சப்படுத்த, வெளியே செல்ல முடியாத சூழல் எனப் பல காரணங்களால் இணையத்தின் பொருள் நுகர்வோராக மாறி வருகின்றனர். இதுமட்டுமன்றி பலரும் இணையத்தில் விற்பனை செய்ய முனைகின்றனர். உணவு, ஆடைகள், மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் எனப் பலவற்றையும் எளிதில் விற்பனை செய்ய என்ன செய்வது? அதில் பின்பற்ற வேண்டியவை எவை? என்பன போன்ற பல செய்திகளையும் எளிய தமிழில் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்நூலை உருவாக்கியுள்ளவர்

அகழாய்வு செய்த போது கிடைத்த பொருட்களுக்கான புகைப்படங்கள், புதிய கற்காலத்தில் கிடைத்த பொருள்களைப் பற்றிய புகைப்படங்கள் என...
24/05/2026

அகழாய்வு செய்த போது கிடைத்த பொருட்களுக்கான புகைப்படங்கள், புதிய கற்காலத்தில் கிடைத்த பொருள்களைப் பற்றிய புகைப்படங்கள் என பல புகைப்படங்கள் இந்நூலின் கருத்துக்களுக்கு வலு சேர்ப்பவையாக அமைந்துள்ளன. புதிய கற்கால மக்களின்வாழ்வியல் முறையையும், அவர்கள் நாகரீகம் அடைந்துள்ள நிலையையும் காட்டும் பல்வேறு பொருள்கள் தொல்லியல் ஆய்வில் வழி கிடைத்துள்ளதை இந்நூலின் வழி அறிய முடிகிறது.
மனிதன் விட்டுச் சென்ற பொருள் எச்சங்களை, அகழாய்வுகள் மூலம் கண்டறிந்து, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து பண்டைய மனித வாழ்வியல், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளும் ஒரு துறையே தொல்லியல். இதில் மனிதன் பயன்படுத்திய மட்பாண்டங்கள், ஆயுதங்கள், நாணயங்கள், கட்டிடங்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்யப்படுகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் புதிய கற்காலம் பற்றிய தொல்லியல் ஆய்வு நூலாக இந்த நூல் அமைந்துள்ளது.

மனிதர்களைப் போலச் சிந்திக்கவும், கற்றுக்கொள்ளவும், முடிவெடுக்கவும் கணினி அமைப்புகளைப் பயிற்றுவிக்கும் தொழில்நுட்பமான AI ...
23/05/2026

மனிதர்களைப் போலச் சிந்திக்கவும், கற்றுக்கொள்ளவும், முடிவெடுக்கவும் கணினி அமைப்புகளைப் பயிற்றுவிக்கும் தொழில்நுட்பமான AI பற்றி விரிவாகக் கூறும் நூலே நூறு தலைமேதாவி. இன்று இயந்திர கற்றல், ஆழ்ந்த கற்றல், இயற்கை மொழி செயலாக்கம் போன்ற பல துறைகளை உள்ளடக்கி, மேலும் ரோபோக்கள் மற்றும் பிற கணினி அமைப்புகளை உருவாக்கப் பயன்படும் இந்த AI குறித்து அனைவரும் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் 13 தலைப்புகளில் விரிவாக ஆய்ந்து உரைக்கின்றது இந்த நூல்.

குப்தர்களின் அரசை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்று இந்திய வரலாற்றின் பொற்காலத்தைக் காணச் செய்தவர் சமுத்திரகுப்தர். அவ...
22/05/2026

குப்தர்களின் அரசை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்று இந்திய வரலாற்றின் பொற்காலத்தைக் காணச் செய்தவர் சமுத்திரகுப்தர். அவர் வீரத்திலும் விவேகத்திலும் மட்டுமல்லாமல் இன்னும் பல துறைகளிலும் சிறந்தவராக விளங்கியவர். வடபாரதத்தின் பல பகுதிகளை போரிட்டு வென்ற இவரது பயணம் தெற்கே காஞ்சி வரை நிகழ்ந்தது. ராஜசேகரன் என்னும் சிறப்புப் பெயரை உடைய இம்மன்னனைப் பற்றிய வரலாற்றுத் தடங்களைக் கற்பனை கலந்து காட்டுவதே இந்த வரலாற்று நாவல்.

பணம் சம்பாதிப்பது ஒரு திறன்; பணத்தை வளர்த்துக் காப்பது ஓர் அறிவு. அந்த அறிவை ஆழமாகப் பகிரும் முயற்சியாக உருவானதே இந்த நூ...
20/05/2026

பணம் சம்பாதிப்பது ஒரு திறன்; பணத்தை வளர்த்துக் காப்பது ஓர் அறிவு. அந்த அறிவை ஆழமாகப் பகிரும் முயற்சியாக உருவானதே இந்த நூல். இந்தப் புத்தகம் முதலீடு என்ற முக்கியக் கருத்திலிருந்து தொடங்குகிறது. பணத்தை வெறுமனே சேமிப்பதற்குப் பதிலாக , அது வளரக் கூடிய வழிகளை அறிந்து செயல்பட வேண்டிய அவசியத்தை விளக்குகிறது. வரி, காப்பீடு போன்றவை சுமைகள் அல்ல; நிதி பாதுகாப்பிற்கான கருவிகள் என்பதை எளிமையாக எடுத்துரைக்கிறது. பணம் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன, முன்னோக்கிய சிந்தனை , திட்டமிடல் ஆகியவற்றை வாசகர்களுக்கு தெளிவாக எடுத்துரைப்பதே இந்நூலின் நோக்கம்.

தமிழின் செம்மொழி இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுவது சிலப்பதிகாரம். "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்று பாரதியாரால் பு...
19/05/2026

தமிழின் செம்மொழி இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுவது சிலப்பதிகாரம். "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்" என்று பாரதியாரால் புகழப் பெற்ற பெருமையுடைய இந்நூல் பல்வேறு சிறப்புக்களை உடையது. முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படும் இக்காப்பியம், தமிழில் தோன்றிய முதல் காப்பிய நூலாகும். ஐம்பெரும் காப்பியங்களில் முதலாவதாக வைத்து எண்ணப்படும் இந்நூலின் ஆசிரியர் இளங்கோவடிகள். இவர் "யாமறிந்த புலவர்களில் கம்பனைப் போல் வள்ளுவரைப் போல் இளங்கோவடிகள் போல் இந்தப் பூமியில் யாரும் பிறந்ததில்லை" என்று பாரதியாரால் புகழபெற்ற ஆசிரியர்களில் ஒருவர்.இந்த உரை அருஞ்சொற்பொருள், தெளிவுரை, விளக்கவுரை, குறிப்புரை என்று மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில் அமைந்துள்ளதோடு, சாதாரண மக்களும் படித்து அறிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

ஆளுமை என்பது பிறப்பால் மட்டுமே கிடைக்கும் பண்பல்ல; சிந்தனை, பழக்கம், பயிற்சி, அனுபவம் ஆகியவற்றின் மூலம் உருவாகி வளரக்கூட...
18/05/2026

ஆளுமை என்பது பிறப்பால் மட்டுமே கிடைக்கும் பண்பல்ல; சிந்தனை, பழக்கம், பயிற்சி, அனுபவம் ஆகியவற்றின் மூலம் உருவாகி வளரக்கூடிய குணநலன். இதனை முறையாக அறிந்து, மேலாண்மை செய்தால் மனித வாழ்க்கைகையில் வெற்றி உறுதியாகிறது. இந்நூல் ஆளுமை , ஆளுமை மேலாண்மை , அதன் தேவை மற்றும் முக்கியம் ஆகியவற்றை எளிமையான நடையில் விளக்குகிறது. ஆளுமையின் வகைகள், ஆளுமை மேலாண்மையின் வகைகள் பற்றித் தெளிவாக எடுத்துரைத்து, வாசகர்களுக்குச் சரியான புரிதலை வழங்குகிறது.

மனித வாழ்க்கையின் தரத்தையும் திசையையும் தீர்மானிப்பதில் மனம் மற்றும் நடத்தை ஆகியன மிக முக்கியமான பங்காற்றுகின்றன. ஒருவரி...
05/05/2026

மனித வாழ்க்கையின் தரத்தையும் திசையையும் தீர்மானிப்பதில் மனம் மற்றும் நடத்தை ஆகியன மிக முக்கியமான பங்காற்றுகின்றன. ஒருவரின் எண்ணங்கள், அணுகுமுறைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றின் வெளிப்பாடே ‘நடத்தை ’.
📗📘📙

ஆரியர்கள் தமிழ்நாட்டில் புகுந்து மெல்ல மெல்லக் காேலாச்சியது எப்படி? அவர்கள் அரசாட்சி செய்தோரை மயக்கித் தங்களின் சொல்லுக்...
16/04/2026

ஆரியர்கள் தமிழ்நாட்டில் புகுந்து மெல்ல மெல்லக் காேலாச்சியது எப்படி? அவர்கள் அரசாட்சி செய்தோரை மயக்கித் தங்களின் சொல்லுக்குக் கட்டுப்பட வைத்தது எப்படி? என்பதையெல்லாம் அழகிய புனைகதையாக்கியுள்ளது இந்த நாவல்.
❤️

நம் வாழ்வில் பலரை நாம் சந்திப்போம். பலரோடு தொடர்பு கொள்வோம். பல நபர்களைக் கடந்து செல்வோம். சிலரோடு நெருக்கமாகத் தொடர்பு ...
13/04/2026

நம் வாழ்வில் பலரை நாம் சந்திப்போம். பலரோடு தொடர்பு கொள்வோம். பல நபர்களைக் கடந்து செல்வோம். சிலரோடு நெருக்கமாகத் தொடர்பு கொள்வோம். இந்த வகையான நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் பல்வேறு தற்குறிகளைச் சந்திக்கிறோம். இந்தத் தற்குறிகளைப் பற்றி, அவர்கள் யார் என்பதைப் பற்றி விளக்கும் வகையில் இந்த நாவல் அமைந்துள்ளது.

தமிழக அரசியல் களத்தில் தலைவர்கள் பலர் உருவாகியிருக்கிறார்கள். அதில் சிலர் மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார்கள்...
31/03/2026

தமிழக அரசியல் களத்தில் தலைவர்கள் பலர் உருவாகியிருக்கிறார்கள். அதில் சிலர் மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வரிசையில், வெகுசனமக்களின் அன்பைப் பெற்ற அதே வேளையில், சக தலைவர்களே வியந்து பார்க்கும் அளவிற்குத் துணிச்சலுடன் செயல்பட்ட முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களது வரலாற்றை எடுத்துரைப்பதாக இந்த நூல் அமைந்துள்ளது.

Address

Kovilpatti

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 5pm

Telephone

+919600942184

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yazhalbookshop.in posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yazhalbookshop.in:

Shortcuts

Share

Category