30/04/2022
இன்று அமாவாசை
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை
ஸ்ரீ சக்தி கணபதியே துணை!
கீழ்க்கண்ட மந்திரத்தை
இன்று 108 முறை ஜெபிக்கவும்
ஸ்ரீ சக்தி கணபதியே துணை!
ஸ்ரீ சக்தி கணபதியே போற்றி
ஸ்ரீ சக்தி கணபதியே சரணம்
Chant - 48 times
ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி
ஜய ஜய பாலா சாமுண்டேச்’வரி ஜய ஜய ஸ்ரீதேவி
ஜய ஜய துர்க்கா ஸ்ரீ பரமேச்’வரி ஜய ஜய ஸ்ரீதேவி
ஜய ஜய ஜயந்தி மங்களகாளி ஜய ஜய ஸ்ரீதேவி
Chant - 108 times
ஸ்யாமா காசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்ம நாமனனே
ஸீமாஸுன்ய வித்வ வர்ஷஜனனீ யா காபி காதம்பினீ
மாராராதி மனோவி மோஹன விதௌ காசித்தம கந்தலீ
காமாக்ஷ்யா கருணாகடாக்ஷலஹரீ காமாயமே கல்பதாம்!
- மூக பஞ்சசதி
பொருள்: காமாட்சி தேவியே, கருணை நிரம்பிய தங்களின் கண்களின் நிகரற்ற கருப்பு நிறமான சந்திரனைப் போலவும், மூவுலகிலும் புண்ணியம் செய்தவர்களின் வாக்கில் அளவற்ற கவித்துவ சக்தியைப் பொழிவிக்கும் மேகக் கூட்டங்கள் போலவும், மன்மதனை எரித்த பரமேஸ்வரனின் மனதை மோகிக்கச் செய்வதில் நிகரற்ற இருள் குவியல் போல உள்ளது. அந்த உன் கருணை கடாக்ஷ அலைகள் எனது அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டுகிறேன். அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய உன் திருவருள் பக்தர்களுக்காக எதைத்தான் செய்யாது? தங்களை மறுபடி மறுபடி வணங்குகிறேன்.
சுபம்.
நன்றி நன்றி நன்றி 🌞
வாழ்க வெல்க வளர்க 💸
🕉🕉