20/06/2019
*தினதியானக் கீர்த்தனைகள்*
(365 நாட்களுக்கான கீர்த்தனைகளின் ஆசிரியர்களின் வரலாறு பாடல் வரலாற்று புத்தகம்)
அருள்திரு . இலாசரஸ் செல்வநாதன் ஜயா அவர்கள் தமிழார்வமும் , இசைப் புலமையும் , இறையியல் தெளிவும் மிக்க , ஓய்வு பெற்ற ( CSI ) ஆயர் .
கிறிஸ்துவின் பாடுகள் குறித்து
1 . ஈரைம்பது ஈடேற்ற கீர்த்தனைகள் ,
2 . தெரிந்த கீர்த்தனைக் கொண்டு வழக்கிழந்துவரும் கீர்த்தனைகளைப் பாட உதவும் நீங்களே பாடலாம் ,
3 . ஆழ்ந்து கிடக்கும் இறையியல் நுட்பங்களையும் , பக்தி உணர்வையும் , இலக்கிய நயத்தையும் , இசைக் கூறுகளையும் , வெளிப்படுத்தும் இலக்கியப் புதையல் ,
4 . கிறிஸ்து குல கீர்த்தனைகள் ,
5 . ஓய்வுக்குப்பின்னும் ஊழியம் கைநூல் ,
6 . தினமும் உணர்ந்து பாடி , தியானிக்க தினதியானக் கீர்த்தனைகள் எனும் இந்நூலும் படைத்தவர் . சபைப் பாகுபாடின்றித் தமிழகத்திலும் ஆந்திர , கர்நாடகவிலும் கீர்த்தனைகளின் புகழைப் பரப்பி வருபவர் . அமெரிக்கா , சிங்கபூர் , மலேசியா , இஸ்ரேல் அகிய நாடுகளுக்குச் சென்று கிறிஸ்தவ - தமிழ் மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கி இறையிசையினை சொற்பொழிவு ஆற்றியும் , காலக்ஷேபம் செய்து இறைப்பணியாற்றி வருகிறார் .
கீர்த்தனை சீர்பரவுவார் , கீர்த்தனை புரவலர் , கீர்த்தனை செம்மல் , எச் . ஏ . கிருஷ்ணபிள்ளை , வீரமாமுனிவர் விருது என 11 விருதுகளையும் பெற்றுள்ளார்.
கிறிஸ்டியன் மீடியா சென்டர் வாயிலாகக் கீர்த்தனைகள் குறித்த சொற்பொழிவுகளைத் தொலைக்காட்சித் தொடராக வழங்கியவர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் கீர்த்தனைகளும் இறையியலும் எனும் தலைப்பில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி , சென்னைப் பேராயத்தில் கீர்த்தனை முன்னேற்றப் பணி அலுவலராக பணியாற்றியவர் .
ஒருவரின் சிந்தனைகளையே ஓராண்டு படித்தால் நூலைப் படைத்தவரின் சிந்தனையே படிப்பவர்க்கு வந்துவிடும் ஆதலால் , பல ' புலவர்களின் சிந்தனைகளை பாடி உணர்ந்து தியானிக்க உம்மிடமுள்ள இந்நூல் உதவிடும்.
ஆசிரியர் அருள்திரு இலாசரஸ் செல்வநாதன்
புத்தகங்கள் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்
8270001865