R.padma's kavithaigal

R.padma's kavithaigal Tution miss

குப்பைமேனி கீரை பொரியல்:தேவையான பொருட்கள்:குப்பைமேனி கீரை- தேவையான அளவுவெங்காயம் (சிறிய/பெரிய) - 2பூண்டு - 1 (உரித்தது)த...
23/09/2021

குப்பைமேனி கீரை பொரியல்:

தேவையான பொருட்கள்:

குப்பைமேனி கீரை- தேவையான அளவு
வெங்காயம் (சிறிய/பெரிய) - 2
பூண்டு - 1 (உரித்தது)
துவரம் பருப்பு-சிறிதளவு வேக வைத்தது
உப்பு -தேவையான அளவு
தேங்காய்- தேவையான அளவு துருவியது.

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு-1/4 tsp
காய்ந்த மிளகாய் - 2, 3 (கட் செய்தது )

செய்முறை:

ஸ்டெப் 1: முதலில் குப்பைமேனிக் கீரையை நன்கு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 2: வாணலியில் சிறிது எண்ணைவிட்டு அவற்றில் கடுகு ,உளுத்தம்பருப்பு இவற்றை விட்டு நன்கு வதக்கவும். கடுகு நன்கு சிவந்தவுடன் காய்ந்த மிளகாயை போட்டு நன்கு வதக்கவும்.

ஸ்டெப் 3: காய்ந்த மிளகாய் நன்கு வதக்கிய உடன் அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு இவற்றை நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். நன்கு வதங்கியவுடன் குப்பைமேனிக் கீரையை வாணலியில் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் .

ஸ்டெப் 4: கீரை நன்கு வெந்தவுடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள துவரம்பருப்பை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். இப்பொழுது சுவையான , ஆரோக்கியமான குப்பைமேனி கீரை பொரியல் தயார்.

குறிப்பு:

* இந்த குப்பைமேனி கீரை பொரியலை வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். மருத்துவகுணம் நிறைந்ததும் கூட. ஆகவே இந்த கீரை பொரியலை அனைவரும் செய்து தன்னுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

* என்னுடைய அடுத்த பதிவில் குப்பைமேனியின் ஆரோக்கியமான மகத்துவமான குணங்களைப் பற்றி எடுத்துரைக்கிறேன் படித்து பயன் பெறுங்கள். நன்றி!

மாங்காய் தயிர் பச்சடி:தேவையான பொருட்கள்:மாங்காய் - 2தயிர் -சிறிதளவுபால்-தேவையான அளவுதாளிக்க:கடுகு உளுத்தம் பருப்பு-1 1/2...
25/04/2021

மாங்காய் தயிர் பச்சடி:

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 2
தயிர் -சிறிதளவு
பால்-தேவையான அளவு

தாளிக்க:

கடுகு உளுத்தம் பருப்பு-1 1/2 tsp
காய்ந்த மிளகாய் - 3 (அ) 4
கருவேப்பிலை -சிறிதளவு
பெருங்காயம்-சிறிதளவு

செய்முறை:

ஸ்டெப் 1: முதலில் மாங்காயை தோல் நீக்கி நன்கு துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 2: பிறகு ஒரு தனி பாத்திரத்தில் துருவிய மாங்காயை கொட்டி அவற்றில் சிறிதளவு தயிரை விட்டு பிறகு தேவையான அளவு பாலை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 3: தனி கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு அவற்றில் தாளிக்கத் தேவையான பொருட்களான கடுகு உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை, கட் செய்த மிளகாய் இவற்றை போட்டு தாளித்து எடுத்துக் கொள்ளவும். தாளித்ததை தயிர் கலவையில் சேர்த்துக் கொண்டால் சுவையான மாங்காய் தயிர் பச்சடி தயார்!

குறிப்பு:

* இந்த மாங்காய் தயிர் பச்சடிக்கு சிவந்த மாங்காய்களை தேர்ந்து எடுத்துக் கொண்டால் பச்சடி மிகச் சுவையாக இருக்கும்.

* இந்த தயிர் பச்சடி க்கு சிறிதளவு தயிரை எடுத்துக்கொண்டு பாலை அதிகம் எடுத்துக்கொண்டால் சரியான அளவில்
சுவை நமக்கு கிடைக்கும். ஏனென்றால் தயிர் அதிகம் சேர்த்தால் புளிப்பு சுவை மிகுதியாக ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே தயிரை குறைத்து பாலை மிகுதியாக்கினால் சரியான அளவிற்கு சாப்பிடும் பொழுது நமக்கு சுவையைத் தரும்.

* இந்த சுவை மிகுந்த மாங்காய் தயிர் பச்சடியை செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெறுங்கள்!

நன்றி!

வாழைத்தண்டு 65 :தேவையான பொருட்கள்.வாழைத்தண்டு - 1தனி மிளகாய்த்தூள் - 2 tspகரம் மசாலா - 11/2 tspஅரிசி மாவு - 1 Cupமைதா மா...
07/03/2021

வாழைத்தண்டு 65 :

தேவையான பொருட்கள்.

வாழைத்தண்டு - 1
தனி மிளகாய்த்தூள் - 2 tsp
கரம் மசாலா - 11/2 tsp
அரிசி மாவு - 1 Cup
மைதா மாவு - 1 Cup
கடலை மாவு - 1/2 cup
உப்பு -தேவையான அளவு

செய்முறை:

ஸ்டெப் 1: முதலில் வாழைத்தண்டை தேவையான வடிவத்தில் வெட்டி வைத்துக்கொள்ளவும்.

ஸ்டெப் 2: ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள கடலை மாவு,அரிசி மாவு,மைதா மாவு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு இவற்றை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

ஸ்டெப் 3: கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அறிந்து வைத்துள்ள வாழைத்தண்டை பிசைந்து வைத்துள்ள மாவில் தொட்டு தொட்டு பொரித்து எடுக்கவும். இப்பொழுது சுவையான ,மொறுமொறுப்பான முற்றிலும் மாறுபட்ட சுவையில் வாழைத்தண்டு 65 தயார்.

குறிப்பு:

* சுவையான இந்த வாழைத்தண்டு 65 சாப்பிட மிகுந்த சுவையுடன் இருக்கும். வாழைத்தண்டு பிடிக்காத நபர்களும், குழந்தைகளும் மிகுந்த ஆர்வத்துடன் இவற்றை விரும்பி சாப்பிடுவர்.

* வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது. உடலில் சிறு நீரகத்தை பெருகச் செய்து உடலில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்கி, சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியே தள்ள கூடிய ஆற்றல் மிக்கது. இத்தகைய பயனுள்ள வாழைத்தண்டை பிடிக்காதவர்கள் கூட இம்முறையில் செய்து சாப்பிட்டு பயனடையுங்கள்.

நன்றி!

ரவா உப்புமா (புதிய சுவையில்)தேவையான பொருட்கள்:ரவை - 200gபச்சை மிளகாய் - 5இஞ்சி-சிறு துண்டு (சிறியதாக வெட்டிக் கொள்ளவும்)...
01/03/2021

ரவா உப்புமா (புதிய சுவையில்)

தேவையான பொருட்கள்:

ரவை - 200g
பச்சை மிளகாய் - 5
இஞ்சி-சிறு துண்டு (சிறியதாக வெட்டிக் கொள்ளவும்)
கேரட் - 1 (துருவியது)
கருவேப்பிலை -சிறிதளவு (கட் செய்தது)
கொத்தமல்லி -சிறிதளவு
தண்ணீர் - 500g
தாளிக்க :

எண்ணெய் -தேவையான அளவு
கடுகு உளுத்தம் பருப்பு - 11/BP
சீரகம் - 1tsp

செய்முறை:

ஸ்டெப் 1: முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

ஸ்டெப் 2: ஒரு கடாயில் சிறிது தாராளமாக எண்ணெய் ஊற்றி அவற்றில் தாளிக்கத் தேவையான பொருட்களான கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் தேவைப்பட்டால் கடலைப் பருப்பு இவற்றை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.

ஸ்டெப் 2: கடுகு நன்கு சிவந்தவுடன் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் துருவல் மற்றும் கருவேப்பிள்ளை இவற்றைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

ஸ்டெப் 3: மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் நன்கு வதங்கியவுடன் ரவையை இட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு நாம் தனியாக கொதிக்க வைத்துள்ள தண்ணீரை ரவை கலவையில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

ஸ்டெப் 4: நீரின் மேலே 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும். ரவை வெந்தவுடன் நன்கு பிரட்டி தனிப் பாத்திரத்திற்கு மாற்றவும். இப்பொழுது சுவையான முற்றிலும் மாறுபட்ட வகையில் ரவா உப்புமா தயார்!

குறிப்பு:

* தாளிப்பில் தேவைப்பட்டால் முந்திரிப் பருப்பையும் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

* தாளிப்பில் தேவைப்பட்டால் வேர்க்கடலையும் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளலாம்.

முற்றிலும் சுவையான இந்த ரவா உப்புமாவை செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெறுங்கள்.

நன்றி!

26/02/2021
சில்லி சப்பாத்தி (ரெஸ்டாரன்ட் ஸ்டைலில்)தேவையான பொருட்கள்:வதக்கி அரைக்க:வெங்காயம்- 3தக்காளி - 5பட்ட-3 துண்டுஇஞ்சி-சிறு து...
26/02/2021

சில்லி சப்பாத்தி (ரெஸ்டாரன்ட் ஸ்டைலில்)

தேவையான பொருட்கள்:

வதக்கி அரைக்க:

வெங்காயம்- 3
தக்காளி - 5
பட்ட-3 துண்டு
இஞ்சி-சிறு துண்டு
ஏலக்காய் - 2
முந்திரி பருப்பு-7, 8
மஞ்சள் தூள் - 1/4 tsp

தாளிக்க:

எண்ணெய் மற்றும் நெய் -தேவையான அளவு
சீரகம் - 2 tsp
வெங்காயம்-2 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 2
சிக்கன் 65 மசாலா பவுடர் - 2 tsp
கரம் மசாலா - 1 tsp
உப்பு -தேவையான அளவு
கஸ்தூரி மேத்தி -தேவையான அளவு
பால் ஏடு (அ) பிரஷ் கிரீம்
சப்பாத்தி -5 (அ) 6 செய்தது.

செய்முறை:

ஸ்டெப் 1: . முதலில் சப்பாத்திகளை செய்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 2: வதக்க தேவையான பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 3: ஒரு பானில் எண்ணை விட்டு அதில் சீரகத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு வெங்காயத்தை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

ஸ்டெப் 4: தக்காளி நன்கு வெந்தவுடன் அவற்றில் சிக்கன் 65 மசாலா பவுடர், கரம் மசாலா பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கிய உடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை அவற்றில் இட்டு நன்கு வதக்க வேண்டும்.

ஸ்டெப் 5: நன்கு வதங்கிய உடன் சப்பாத்திகளை இப்போது நமக்குத் தேவையான வடிவத்தில் கட் செய்து வைத்துக் கொண்டு வதக்கிய கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும். கடைசியாக கஸ்தூரி மேத்தி மற்றும் பிரஷ் க்ரீம் இவற்றை விட்டு நன்கு வதக்கி இறக்கவும். இப்பொழுது சுவையான சில்லி சப்பாத்தி ஹோட்டல் சுவையில் தயார்.

நன்றி!

05/02/2021

பிரண்டை பொடி:

தேவையான பொருட்கள்:

பிரண்டை -கையளவு
காய்ந்த மிளகாய் - 10
மளுகு - 1 tsp
வெந்தயம் - 1/4 tsp
உளுத்தம் பருப்பு-1 cup
துவரம் பருப்பு-1/4 cup
பெருங்காயம்-சிறிதளவு
கருவேப்பிள்ளை-கையளவு
தூள் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஸ்டெப் 1: முதலில் பிரண்டையை நன்கு கழுவி பிறகு நன்கு துடைத்து அவற்றின்மேல் பாகத்திலுள்ள தோல்களை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 2: ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பிரண்டையை நன்கு வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் சிறிது பெருங்காயத்தை நன்கு வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 3: பிறகு காய்ந்த மிளகாய் போட்டு நன்கு வதக்கி அவற்றையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மிளகு மற்றும் வெந்தயம் இவற்றையும் நன்கு வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

ஸ்டெப் 4: உளுத்தம்பருப்பை சிவக்க வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பையும் நன்கு சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கை அளவு கறிவேப்பிலையை நன்கு கழுவி அவற்றையும் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 5: வதக்கிய கலவையை நன்கு ஆற வைத்து பிறகு தேவையான அளவு உப்பையும் சேர்த்து வதக்கி மிக்ஸியில் நன்கு மைய அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு தேவையான போது அவற்றை நல்லெண்ணெயுடன் பரிமாறவும்.

குறிப்பு:

* இந்த சுவையான பிரண்டைபொடியை சூடாக இருக்கும் இட்லி ,தோசை இவற்றுடன் பரிமாற மிக அருமையான தாக இருக்கும்.

* கால்சியம் சத்து நிறைந்த இந்த பிரண்டை பொடியினை தற்போதுள்ள நாம் பயன்படுத்தி வர கால்சியம் குறைபாட்டிலிருந்து விடுபட்டு எலும்பிற்கு நல்ல சத்தினை பெறமுடியும். உடலுக்கு வலுவைத் தரக்கூடிய இந்தப் பிரண்டை பொடியினை குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கொடுத்து அவர்களின் கால்சியம் சத்தை பெருக்க வேண்டும்.

* அனைவரும் இந்த பிரண்டை பொடியினை உணவில் சேர்த்து பயன் பெறுவோமாக!

நன்றி!

Address

Tirupattur
635653

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.padma's kavithaigal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share