15/12/2022
மோசடியான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் தவறான தகவல்களைத் தந்து, அவர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்து அல்லது பல்வேறு மதிப்புமிக்க பொருட்களைக் கொண்ட பார்சல்களைப் பெறுவதற்கு சுங்க வரி செலுத்துமாறு கூறி தனிநபர்களிடமிருந்து பணத்தை மோசடி செய்துள்ளனர்.
சமீப காலமாக இது தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக நிதிப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே, முறையான சரிபார்ப்பு இன்றி மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் தெரியாத தரப்பினரின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்புச் செய்யவோ அல்லது வேறு வழிகளில் பணத்தை அனுப்பவோ வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மோசடி செய்பவர்கள் தொடர்புடைய பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக பின்வரும் தகவல்களை உங்களிடமிருந்து கோரலாம்,
தனிப்பட்ட அடையாள எண் (PIN),
கார்டுகளின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கார்டுகளை அங்கீகரிக்கப் பயன்படுத்தப்படும் கட்டண அட்டை சரிபார்ப்பு எண்கள் (CVV),
பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு முறை கடவுச்சொற்கள் (OTPகள்)
மொபைல் பயனர் ஐடிகள், கடவுச்சொற்கள் மற்றும் ஒரு முறை கடவுச்சொற்கள் (OTP).
எனவே, இவ்வாறான இரகசியத் தகவல்களை மூன்றாம் தரப்பினருடன் பகிரக்கூடாது எனவும், இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் நிதிப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு மேலும் வலியுறுத்துகிறது.
மேலும், அத்தகைய விவரங்களை வழங்குவது நிச்சயமாக உங்களை/உங்கள் குடும்ப உறுப்பினர்/உங்களுக்கு நெருக்கமானவர்களை நிதி மோசடிக்கு ஆளாக்கிவிடும்.
இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் உங்களுக்கு வந்தால், 011-2477125 அல்லது 011-2477509 என்ற இலக்கத்தின் ஊடாக நிதிப் புலனாய்வுப் பிரிவிற்குத் தெரிவிக்குமாறு இலங்கை மத்திய வங்கி உங்களுக்கு அறிவுறுத்துகிறது.